அணி
421
எடு :-
பண்டு புரமெரித்த தீமேற் படர்ந்தின்றும்
அண்ட முகடு நெருப்பறா - தொண்டளிர்க்கை வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதன்மேல் விழி.
(நெருப்பு -இடி.
அநியம வுவமை
இது உவமை வகைகளுள் ஒன்று. நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதோர் உவமை புணர்த்துக் கூறுவது அநியமவுவமை
யாம்.
எடு :-
“கௌவை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு மௌவல் கமழுங் குழன்மடவாய் – செவ்வி மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி அதுபோல்வ துண்டெனினு மாம்'
அநேகாங்க வுருவகம்
இது உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றையும் உருவகஞ்செய்து உரைப்பது அநேகாங்க வுருவகமாகும்.
எடு :-
“கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்று மைத்தடஞ்சேண் மைந்தர் மனங்கலங்க - வைத்ததோர் மின்னுளதான் மேக மிகையுளதான் மற்றதுவும் என்னுளதா நண்பா வினி”
அந்தாதி
ஓரடியின் அல்லது ஒரு செய்யுளின் ஈற்றில் வருஞ்சொல் அடுத்த அடியின் அல்லது அடுத்த செய்யுளின் முதலில்வரத் தொடுப்பது அந்தாதியாகும். அந்தம் ஆதியென்பது, அந்தாதி யென்றாயது; அந்தம்-ஈறு; ஆதி-முதல்; அந்தமே முதலில் வருவது என்பது இதன் பொருள்.
ம