எடு :-
அணி
423
“உனதுபிர தாப முயிரிழந்த தெவ்வர்
மனைவியரா னோருறுப்பின் மண்ணும் - சினவிழியின் நாரமுநெஞ் சிற்றீயு நாசியிற்கா லும்மறிவின்
ஆரும் வெளியுருவு மாம்
இதில், ஐம் பூதங்களும் முறைபிறழாமற் சொல்லப் பட்ட ன.
அவயவவுமை
அவயவத்தை உவமித்து அவயவியை உவமிக்காது கூறுவது அவயவவுவமை என்பதாம்.
எடு :-
“மாத ரிலவிதழ்போன் மாண்பிற்றே மாதவனால் வானோ ரருந்து மருந்து
அவயவியுவமை
அவயவியை உவமித்து அவயத்தை உவமியாது கூறுவது அவயவியுவமையாம்.
எடு :-
“பொன்னங் கொடியனைய பொற்றொடிதன் றாட்சுவடு
மென்னன் புறத்தோன்று மிங்கிவைக - என்னங்
கடிக்கமலஞ் சேரரங்கர் கானிகராங் காளை
யடிச்சுவடு மாங்கவையே யாம்.
அவயவவுருவகம்
உறுப்புக்களை உருவகஞ்செய்து அவயவியை உருவகஞ் செய்யாது கூறுவது அவயவவுருவகமாகும்.
எடு :-
“புருவச் சிலைகுனித்துக் கண்ணம்பெ னுள்ளத்
துருவத் துரந்தா ரொருவர் - அருவி
பொருங்கற் சிலம்பிற் புனையல்குற் றேர்மேல்
மருங்குற் கொடிநுடங்க வந்து