436
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
இதன் ஈற்றடியில் ‘மலையா மலையா' என்றொரு சொல் மடங்கினமையறிக.
உடன்படல் விலக்கு
உடன் பட்டார்ப் போல விலக்குவது உடன்படல் விலக்கு என்னும் அணியாம்.
எடு
“அப்போ தடுப்ப தறியே னருள்செய்த
இப்போ திவளு மிசைகின்றாள் - தப்பில் பொருளோ புகழோ தரப்போவீர் மாலை இருளோ நிலவோ வெழும்.
உடனிகழ்ச்சியணி
கற்றோரை மகிழ்விக்கும் உடனிகழ்தலைச் சொல்லு தலாம். இதனை வடநூலார் ‘சகோக்தியலங்கார’ மென்பர். இதற்கு ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபுவரும். எடு :-
"இகந்த பகைவ ரினத்தொடுவேல் வேந்தே திகந்த மடைந்ததுநின் சீர்.”
உபாயவணி
யாதாயினும் ஓர் ஊதியம் பெறுதற்கு மிக்க காரண
மென்று கூறப்படும் முக்கியமான தொரு சூழ்ச்சியை
-
யுணர்த்துதல் உபாயவணியாகும். (சூழ்ச்சி உணர்வோடு உசாவியுண்டான வுறுதியறிவு.)
எடு :-
66
“சூடிக் கழித்த துளபச் சருகெனினு நாடித் தருக திருநாகையா - யூடிப்
புலவா ததற்கு நினதருட்கும் பொற்றோள்
கலவாத வெற்குநலங் காண்.'
பாயவிலக்கு
விலக்குவதனை ஒரு உபாயம் (தந்திரம்) காரணமாக விலக்குவது உபாயவிலக்கு என்னும் அணியாம்.