அணி
471
எடு :-
66
'கடிதுமலர்ப் பாணங் கடிததனிற் றென்றல்
கொடிதுமதி வேயுங் கொடிதாற் - படிதழைக்கத் தோற்றியபா மாறன் றுடரியின்மா னின்னுயிரைப் போற்றுவதார் மன்னா புகல்.”
இதனுள், துன்பஞ் செய்வதை யொன்றாயே கூறாது பல வாகவே திரட்டிக் கூறியவாறு காண்க.
சமுச்சியவணி : (ஆ)
இன்பமுந் துன்பமும் இருவயிற் பிறந்ததாகக் கூறுவனவும் சமுச்சியவணியாம்.
எடு :
“காரி தருமாறன் காசினிமீ தேயுதிப்ப
வாரியர்மெய் பூரித் தகமகிழ்ந்து - பேரின்ப முள்ளத் துடிக்கு முறுவலத்தோள் வாதியர்மெய் துள்ளத் துடித்ததிடத் தோள்.'
ஞாபகவேது :
கருத்தா, கருவி, பொருள், செயல், காலம், இடம் ஆகிய காரணமின்றிப் பிறகாரணத்தினால் உய்த்துணரத் தோன்றுவது ஞாபகவேது என்னும் அணியாம்.
எடு :
66
காதலன்மே லூடல் கரையிறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப வாய்துடிப்ப - மீது
மருங்குவளை வின்முரிய வாளிடுக நீண்ட கருங்குவளை சேந்த கருத்து.
சாதிக் குறைவிசேடம்
وو
இது விசேடவணிவகைகளுள் ஒன்று. சாதியில் குறைவு பாடுகாட்டிக் காரியத்தில் உயர்வு தோன்றச் சொல்லுதலாம்.
எடு :
"மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுவுண்ட
ஆயனார் மாறேற் றமர்புரிந்தார் - தூய