அணி
மாலையின் மால்கடலார்ப் பமதன் றொடுக்கு
மாலையின் வாளி மலர்.
99
இதில், மால், மாலை என்னும்
477
இரு சொற்களும்
செய்யுளில் பலவிடத்தும் வந்து வெவ்வேறு பொருள் பயந்து நின்றமையான் இது சொற்பின் வருநிலையணியாயிற்று.
சொற்பொருட் பின்வருநிலையணி
ஒரு செய்யுளுள் முன்னர் வந்த சொல்லே பின்னர்ப் பல விடத்தும் வந்து ஒரே பொருளைத் தருமாயின் அது சொற் பொருட் பின் வருநிலையணியாம்.
எடு :-
“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
இதில், சொல் என்னும் சொல் செய்யுளின் பலவிடத்தும் வந்து ஒரே பொருளைத் தந்தமையான் து சொற்பொருட் பின்வருநிலையணியாயிற்று.
சொல்விலக்கணி
புகழினும் இகழினும் தானே உரைத்த சொல்லாராயா துரைத்தன் மறுத்து மற்றதின் மிக்க பிறிதொன் றுரைப்பது
சொல்விலக்கணியாகும்.
எடு :-
66
'தானைவேந் தென்பான்றான் றானமா யொன்றீயான் யானென்றொன் றீயா னவனென்றே - னேனையவர் கொள்பொருள் கொள்வான் குடியலைத்து நோயீவான் றெள்பொரு டேற்றாச் சினத்து.”
தகுதியணி
இவ்வணி மூன்று வகைப்படும்.
(1) தகுதியாகிய இரண்டு பொருள்களுக்குத் தொடர்பைச் சொல்லுதல்.