அணி
507
இதில், தந்தை விளையாட்டுச் சிந்தையுடைய மைந்தற்கு அறிவு கொளுத்தலாகிய சிறப்புப் பொருள் தோன்றப் பொதுப் பொருள் சொல்லப்பட்டது.
பொதுமையணி :
ஒப்புமையால் இரண்டு பொருள்களுக்கு சிறப்புத் தோன்றக் கூறுதலாம். இதனைவடநூலார் ‘சாமானியாலங்கார' மென்பர்.
எடு :-
வி
“வண்பதும வாவி யடைந்தமட வார்வதனம்
பண்பின் அறியப் படா.
பொய்த்தற் குறிப்பணி :
ஒரு பொருளைப் பொய்யாக்குவதற்கு மற்றொரு பொய்ப் பொருளைக் கற்பித்தல் பொய்த்தற்குறிப் பணியாம். இதனை வடநூலார் ‘மித்தியாத்தியவசிதியலங்கார’ மென்பர்.
எடு :-
“வான்பசுந்தோன் போற்சுருட்ட வல்லோன் பசுபதியைத் தான்பரவா தெய்துறூஉம் வீடு.
"விண்மலர்த்தார் வேய்ந்தோனே வேசையரைத் தன்வசமாப் பண்ணுதற்கு வல்லனென் பார்.
பொருட்குறைவிசேடம் :
99
இது விசேடவணிவகைகளுள் ஒன்று. பொருளில் குறைவு தோன்றக் கூறிக் காரியத்தில் உயர்வு தோன்றச் சொல்லுவது பொருட்குறை விசேடம் என்னும் அணியாம்.
எடு :-
"தொல்லை மறைதேர் துணைவன்பா லாண்டுவரை எல்லை யிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள் ஓங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால் ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை.'
66
இதில், இருநாழிகொண்டு” என்று பொருட்குறை
காட்டி, ‘அதனைக் கொண்டு உயிரனைத்தும் ஊட்டும்' எனக்