அணி
523
யுக்தி அணி
தனது உள்ளக் கருத்தைப் பிறரறியாதவாறு யுக்தியால் மறைப்பது யுக்தியணியாகும்.
எடு :-
“மாணிழையா ளன்பன் வடிவைப் படத்தெழுதும்
பாணிலங் கோர்சிலர்தன் பாங்குற - நாணிமுகம்
கோட்டினாள் சித்தரித்த கோலவுரு வின்கரத்தில் தீட்டினாள்கன் னத்தின் சிலை.'
யுத்தவேது
இதுவும் ஏதுவணியின் பாற்படும்.
காரணத்திற்குப் பொருத்தமான காரியம் நிகழ்வது யுத்த
வேதுவாகும்.
எடு :-
யுத்தம் - பொருத்தம்.
“பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவால்
முன்ன ரசைந்து முகுளிக்கும் - தன்னேர்
பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
அரவிந்த நூறா யிரம்.”
இங்கே, கையாகிய தாமரையின் குவிவு காரியம் எனவும், வேற்படையின் ஒளியாகிய நிலாக் கதிர் ஒளியாகிய நிலாக் கதிர் அக்குவிவுக்குப் பொருத்தமான காரணம் எனவும் அறிக.
வக்கிரவுத்தி
க
வெளிப்படையாக விளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக வெதிர் மொழி கொடுத்தவிடத்து மீண்டுந் தெளிவிப்பனவாய் நிரைத்த தொடர் மொழி தோறும் அம்முன்னின்றவர் இரட்டுகிற இசை திரிநிலைத்தாயுரைப்பது வக்கிரவுத்தியாகும்.
எடு :-
66
'அஞ்சக்கரனோ வென்றேன்சங்கரனா மென்றான்றனியாழி
மிஞ்சத்தரித்ததிருத்தேர் வெய்யவனோ வென்றேன் வெயிலென்றான்