போரிற் சமர்த்தன் உட்கொண்டிருக்கின்றது. விறல் கோளணி : (அ)
வலிமையுடைய
அணி
533
அல்லையென்னும் இகழ்ச்சியை து சகுனிக்குச் சொன்னது.
பகையின் மேலாவது,
அதனது
துணையின் மேலாவது தனது வீரத்தைச் செலுத்துதலைச் சொல்லுவது விறல் கோளணியாகும். இதனை வடநூலார் 'சமாதியலங்கார' மென்பர்.
எடு :-
66
“வண்டினந்தே னூட்டுமரை வாட்டலிற்சீற் றங்கொடுபோய்க் கண்டதுதிங் கட்குக் களங்கு” - இது பகை.
“தாக்குவிழிக் குத்துணையாய்ச் சார்ந்திலங்கு காதைக்கீழ் ஆக்கிநின்ற நீலத் தலர்” - இது பகைத்துணை.
விறல் கோளணி : (ஆ)
வலிமை பொருந்திய பகைவனிடத்துத் தன் வலிமையைச் செலுத்தமுடியாமல் அவனைச் சேர்ந்தவர்களிடத்துத் தன் வன்மையைச் செலுத்துவது விறல் கோளணியாகும்.
எடு :-
"மாரனம் மேரெனுஞ்செல் வங்கவாந்தோற் சேர்ந்தவனென்
றோருதலுற் றுன்பா லுறுமழுக்கா றாருதலா வன்பெதுவு மின்றி யமர்புரிந்து வாட்டுகிறா னென்பெண் மகவதனை யே.
வினாவில் விடையணி
ஒன்றைக் கூறுங்கால் பிறரெதிர் பிறிதொன்றை யுணர்ந்து வினாவினதாகச் சொல்லித்தன் பொருள் விளங்க மறுமொழி கூறுவது வினாவில் விடையணியாகும்.
எடு :-
“நெடிதுநா ளுற்றநோய் மருந்தி னீர்மையாற் கடிதுதீர் தரலருங் கருமமா மென்பாய்
நெடிதுநா ளுற்றநோய் நீள மீண்டுயிர்
கடிதுமாய்ந் தொழிதரக் கடுவுண் பாவதேன்.”