பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் நாடகம் 105 ஆல்ை அன்று அந்த நிலையிலில்லை. மின்சார இரெயிலும் கிடையாது. ஏரியின் நடுவில் இருப்புப் பாதை சென்றது. ஒருபக்கம் மாநாட்டுப் பந்தலும், மற்ருெரு பக்கம் பலர் தங்க அறைகளும் அமைக்கப் பெற்றிருந்தன. அதற்கெனத் தனி இரெயில்வே நிலையம் முதலியனவும் இருந்தன. நாங்கள் அந்த மாநாட்டுப் பந்தலில் நடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் அப்பா மாசிலாமணி முதலியார் எங்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்ருர். நாங்கள் பத்து மணிக்குச் சென்னை சேர்ந்தோம். எங்கேயோ ஓரிடத்தில் ஒரு சத்திரத்தில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். பகல் உணவுக்குப் பின் நாங்கள் மாநாட்டுப் பந்தலுக்கு அழைத்துச் செல்லப்பெற்ருேம். பந்தல் மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. நாங்கள் சென்ற அன்றைக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லை. எல்லாம் முதல் நாளே முடிந்துவிட்டன. அப்பா அவர்கள் அந்தப் பந்தலில்தான் எங்களது நாட கத்தை நடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனல் நாங்கள் அங்கே சென்றபோது யாரும் எங்களைப்பற்றிக் கவலைப் பட்டதாகக் காணுேம். என்ருலும் அப்பாவும் தலைமை ஆ. சி ரி ய ரு ம் எங்கெங்கோ சென்று வந்தார்கள். அங்குள்ளவர் அனைவரும் மூட்டை முடிச்சுகளுடன் தத்தம் ஊர்களுக்குப் புறப்பட ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் எல்லோரும் கூட்டமாக அந்த மாநாட்டுப் பந்தலையும் பிறவிடங்களையும் கண்டுகொண்டே அன்றைப் பொழுதைக் கழித்தோம். அன்று அங்கு நாடகம் இல்லை. ஏன்? என்றுமே அந்த இடத்தில் நாடகம் நடக்கவில்லை.