பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்குத்தி 147 அவர் அது வந்த வரலாற்றையும் அதுபற்றித் தான் காட்டிய தீரச் செயலையும் பெருமையாகக் கூறி, அந்த மூக்குத்தியைத் தந்ததால் மண்டகப்படிக்கு ஒரு ரூபாய் தர வேண்டும் என்று சொன்னர். அம்மாவும் பிறகு என்று சொல்லாது, அப்போதே கொண்டுவந்து கொடுத்தார்கள். பிறகு அவர் சென்றுவிட்டார். அவர் அந்த மூக்குத்தியைப் பற்றி அளந்த கதை, அதன் முழு விவரத்தையும் அறிய என்னைத் தூண்டி யது. அம்மாவை அது பற்றிக் கேட்டேன். அவர்கள் முன் னமே அந்த வீண் பேச்சாளருடன் பேசிக் கொண்டிருந்த தால் பல வேலைகள் அப்படியே கிடக்கின்றனவென்றும், அவற்றை முடித்து மாலையில் எல்லாவற்றையும் சொல்லுவ தாகவும் சொன்னர்கள். குழந்தைகள் கதை கேட்க ஆவல் கொள்வது போலவே என் உள்ளத்திலும் ஏனே அக்கதை யைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் தோன்றிற்று. மாலை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். மாலைப்பொழுது வந்தது. அம்மா எல்லா வேலையும் முடித்துக்கொண்டு வந்தார்கள். நானும் உட்கார்ந்தேன். அவர்கள் மூக்குத்திக் கதையைச் சொன்னர்கள் இரண்டு வருடங்களுக்கு முன், எனது தந்தையார் வாழ்ந்த காலத்தில் அவர்கள் போட்டுக் கொண்டிருந்த மூக்குத்தி அது. அந்தக் காலத்தில் அவர்கள் ஆற்றில் மூழ்கும் வழக்கம் உண்டு. இன்றும் எங்கள் ஊரில் பெண்களும் ஆண்களும் பெரும் பாலராக ஆற்றில் சென்று நாள்தோறும் மூழ்கி, ஆடை துப்புரவு செய்துகொண்டு வருவ்து வழக்கம். வேலையற்ற வர்களில் சிலர்தான் ஆற்றுக்குக் குளிக்கச் செ ல் ல வு ம் சோம்பற்பட்டு வீட்டுக் கிணற்று அடிகளிலே குளித்துவிடு வார்கள். அன்றும் பெரும்பாலோர் ஆற்றுக்குச் சென்று குளிப்பது போன்றே எனது அன்னையாரும் நாள்தோறும்