பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 இளமையின் நினைவுகள்

40 இளமையின் நினவுகள் ருந்தவர்களோ என்னைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவர்கள். அவர்கள் சொல்லியபடி செய்யாவிட்டால் என்னை அடிக்கவும் செய்வார்கள். நாம் ஏன் வந்தோம் என நடுங்கினேன். என்ருலும் உயிர் நீங்கிவிட்டபடியால் நாய்க்குட்டியைப் புதைத்துவிடலாம் என்றார்கள். அப்படியே புதைத்து விட்டு, அருகில் இருந்த ஊற்றில் முழுகி விட்டுக்கு வந்து விட்டோம். மறுநாள் காலையில் அந்தத் தெருப் பள்ளிக்கூடத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது வாத்தியார்' என்னைக் கூப்பிட்டார். ஏன் என்று எனக்குத் தெரியாது. அவர், 'நேற்றுச் சாயங்காலம் நீ உயிரோடு ஒரு நாய்க்குட்டியை ஆற்றில் புதைத்தாயாமே, மெய்தான? என்று கேட்டார்கள். நான் நடுங்கிவிட்டேன். உள்ளது உள்ளபடியே நடந்தவற்றைச் சொன்னேன். அவர் இருக்கும், நான் அப்போதே நினைத்தேன்' என்று சொல்லி அந்த இருபிள்ளைகளையும் "கூப்பிட்டுப் பிரம்பைக் காட்டி மிரட்டி உண்மையைக் கூறும் படி.சொன்னர். அவர்களும் பிரம்புக்கு அஞ்சி நடந்ததை நடந்தபடி சொல்லிவிட்டார்கள். அந்த மாதிரிப் பொய்க் கதைகளைக் கட்டக்கூடாது என்றும் மேலும் குறும்பு செய்தால் தண்டனை அதிகமாகும் என்றும் எச்சரித்து அனுப்பினர்கள். நானும் நடுங்கிக்கொண்டே பக்கத்தில் இருந்தேன். வெளியே வந்தால் அந்த இருவரும் என்ன செய்வார்களோ என்ற பயம்தான். ஆசிரியர் என்னை அருகே அழைத்து அந்தப் பொல்லாத பயல்களோடு சேரவேண்டாம். நல்லவர்களுடன் சேர்ந்து பழகு என்று எச்சரித்து அனுப்பினர். 'நல்லவர்கள் யார்?' என்ற கேள்வி என் உள்ளத்தில் பிறந்தது. இந்தச்சேதி என் அம்மாவுக்கும் எப்படியோ தெரிந்தது. அவர்கள் என்ன நன்ருக அடித்துவிட்டார்கள். நான் செய்