பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சினிமா

157


சின்னம்மை : இந் நோய் ஆங்கிலத்தில் ‘சிக்கன்பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அம்மை நோய் வகைகளில் இது ஒரு கொடிய தொத்து நோயாகும். இந்நோய் வைரஸ் நச்சு நுண் கிருமியால் உண்டாகிறது. இந்நோயுள்ளவரைத் தொடுவதாலோ அல்லது அவர் வெளியிடும் சுவாசக்காற்றை பிறர் சுவாசிப்பதாலோ இந்நோய் எளிதாகப் பரவுகிறது. நோயாளியின் தொடர்பில்லாதவருக்கும்கூட இந்நோய் வருவதுண்டு.

இந்நோய் பெரும்பாலும் 2 முதல் 6 வயதுள்ள சிறுவர்களையே பீடிக்கிறது. பெரியவர்களுக்கும் இந்நோய் வருவதுண்டு. இந்நோய்க் கிருமிகள் உடலில் சேர்ந்த பன்னிரண்டு அல்லது பதினைந்து நாட்களுக்குப்பின் தலைவலி, முதுகுவலி, குளிர் போன்றவைகள் ஏற்படும். அதன்பின் காய்ச்சலும் அதைத் தொடர்ந்து கொப்புளங்களும் உண்டாகும். முதலில் நீர்க் கோர்வையோடு உருவாகும் கொப்புளங்கள் மூன்று நாட்களுக்குப்பின் பால் கொப்புளங்களாக உருமாறும். நான்காம் நாள் கொப்புளம் சுருங்கத் தொடங்கும். அதன்பின் கொப்புளம் உலர்ந்து பொருக்காக மாறி உதிரும். சின்னம்மைக் கொப்புளங்களால் வடுக்களே தழும்புகளோ உண்டாவதில்லை.

இந்நோய் கண்டவுடன் நோயாளியைத் தனிமைப்படுத்துதல் அவசியம். நோய்தீர்ந்த நிலையில் கொப்புளப் பொருக்குகள் உதிர்ந்த பின்னரே பிறரோடு கலந்து பழகவேண்டும். பெரியம்மையைவிட சின்னம்மை மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்.


சினிமா : உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ள தொழில் 'திரைப்படத்துறை’ என அழைக்கப்படும் சினிமாத் தொழிலாகும். சினிமாத்துறை

திரைப்படக் கருவியின் அமைப்பு

இன்று பல்வேறு வகையினவாகப் பிரிந்து வளர்ந்து வருகிறது. உலகமக்களில் பெரும்பான்மையினர் சினிமாவை விரும்பிப் பார்த்து மகிழ்கின்றனர்.

படப்பிடிப்புக் கருவியான கேமரா மூலம் சினிமாப்படம் தயாரிக்கப்படுகிறது.இஃது கண் பார்வையின் தன்மையை அடியொற்றி அமைந்துள்ளது. நாம் ஒரு பொருளைப் பார்க்கும் போது, அப்பொருளின் பிம்பம் கண்ணின் பின்புறம் அமைந்துள்ள பார்வை படலத்தின் மீது விழுகிறது. இப்பிம்பம் பார்வைப் படலத்தினின்றும் மறையாமல் 1/16 விநாடி நேரம் நீடிக்கிறது. அந்தக் குறிப்பிட்ட விநாடிக்கும் வேறொரு பிம்பம் பார்வைப் படத்தின் விழுமானால், இரண்டு பிம்பங்களுக்கிடையிலான குறுகியகால இடைவெளி கண்ணுக்குப் புலனாவதில்லை. காட்சிகளைத் தெரிந்து பார்ப்பது போன்ற உணர்வே தோன்றும். இந்த அடிப்படையில்தான் நீண்ட பிலிம் சுருள்களைக் கொண்டு காட்சிகளைப் படமாக்குகிறார்கள்.

நீண்ட சுருள் பிலிமில் உளள சிறு பகுதி (பிரேம்)களுக்கு இடையேயுள்ள இடைவெளித் தூரம் படம் ஓடும் 'புரொஜக்டர்’ எனும் கருவியில் எடுத்துக் கொள்ளும் நேரம் 1/16-க்குள்ளாகவே அமைவதால் படம் தொடர்ச்சியாக ஓடுவதுபோன்ற பிரமை நமக்கு ஏற்படுகிறது. திரைப்படம் கேமரா எனும் காட்சி எடுக்கும் கருவி கொண்டு தொடர்ச்சியாகப் பிலிமில் காட்சி பதிவு செய்யப்படுகிறது. இக்காட்சிகள் 'புரொஜக்டர்’ எனும் படம் காட்டும் கருவி மூலம் திரையில் தொடர்ந்து காட்சி தெரியும்படி ஓட்டப்படுகிறது.

சினிமாப் படம் இன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவை கதைப்படம், செய்திப்படம், விளக்கப் படம், கல்விப்படம், கேலிச் சித்திரங்களைக் கொண்டு இயங்கும் கார்ட்டுன் படம் என்பவையாகும். இவை 35 மில்லி மீட்டர், 16 மில்லி மீட்டர், 8 மில்லிமீட்டர் என்ற அளவுகளில் உள்ள பிலிம் சுருள்களில் படம் பதிவாக்கப் படுகிறது. இப்படங்கள் விநாடிக்கு 24 பிரேம்கள் படமாகின்றன. இவை திரைப்படக் கருவியில் (புரொஜக்டர்) விநாடிக்கு 24 படங்கள் விதம் தொடர்ந்து ஓடும்போது திரையில் தெரி