பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181


ஒவ்வொரு நேரத் தொழுகையின் போதும் இறைவன் முன்னிலையில் தொழுவது போன்ற மனநிலையைத் தொழுகையாளி பெறுவதால் இறைநெறி நின்று வாழ வேண்டும். இறை நெறி பிறழ்ந்து வாழ நேர்ந்தால் இறைத் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இறைநெறி பேணி வாழ்ந்தால் சுவர்க்கப் பெருவாழ்வு எனும் இறை வெகுமதி நிச்சயமாகக் கிடைக்கும் என்ற உறுதி உள்ளத்தில் எழும்போதே ஒருவித நல்லுணர்வெழுச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது.

வைகறைக்கு முன்னதாக உண்பதையும் பருகுவதையும் நிறுத்தி விடும் நோன்பாளி மாலை மயங்கும்வரை பசி என்பது எத்தகையது. தாகத்தின் தகிப்பது எவ்வாறானது என்பதையெல்லாம் நேரிடையாக அனுபவித்து அறிந்து, உணர்ந்து, தெளிகிறான். இவ்வாறு முப்பது நாட்கள் நோன்பு நோற்பதால், யார் உண்ண, பருக வழியில்லாது தவிக்கிறாரோ அவருக்கு வலியச் சென்று உதவத் துடித்தெழுகிறான். மனக்கட்டுப்பாட்டுடன் பிறர்க்குதவும் பேராண்மையாளனாகவும் மாறுகிறான்.

'ஜகாத்' எனப்படும் ஏழையின் பங்கும் அதே முறையில் அமைந்திருப்பதுதான். தான் தேடிய பொருளின் நிகர வருமானத் தொகையில் இரண்டரை விழுக்காட்டை ஏழை எளியவர்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் போன்றவர்களைத் தேடி இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாமல் தானம் வழங்கும் முறை ஈகைக் குணத்தைப் பேணி வளர்க்கிறது. நாம் தேடியவையா யினும் அதில் பிறருக்கும் பங்குண்டு என்ற எண்ணமும் அனைவருக்கும் உதவ வேண்டும்; எல்லோருக்கும் எல்லாம் என்ற தயாள உணர்வை உள்ளத்தை ஊட்டி வளர்ப்பதாயமைந்துள்ளது.

ஹஜ் எனும் புனிதப் பயணம் மக்கள் அனைவரும் சமமானவர்கள், அனைவரும் ஆதம் (அலை) வழிவந்த