பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212


இவ்வளவு வலுவாக, தெளிவாகக் கூறிய மற்றொருவரை வரலாற்றில் காணவே இயலாது என்பது ஒப்ப முடிந்த உண்மையாகும்.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பேருண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரெழுத்தும் கற்க இயலா ‘உம்மி’ நபியாக நாயகத் திருமேனி இருக்க வேண்டும் என்பது இறை நாட்டமாகும். பள்ளி செல்லும் பருவத்தை எட்டுவதற்கு முன்பாகவே தன் பெற்றோரை இழந்து, அநாதையாகி விடுகிறார். தன் தாத்தா, சித்தப்பா போன்றோரின் அரவணைப்பில் வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. இத்தகு சூழலை இறைவனே அண்ணலாருக்கு உருவாக்கியுள்ளான். கற்க வேண்டுமென்றால் ஒரு ‘உஸ்தாது’ விடம் செல்ல வேண்டும் ஒரு ஆசிரியரிடத்திலேதான் கல்வி கற்க முடியும். அதைத்தான் நீங்களும் நானும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பெருமானாரின் நிலை முற்றிலும் வேறு. அவருக்கு இறைச் செய்தி 'வஹீ’ யாக வரவிருக்கிறது. அவர் ஒரு ஆசிரியரிடத்திலே, ஒரு மனிதரிடத்திலே அவர் கல்வி கற்றால் அம் மனிதர் அவருக்குக் ‘குரு’ ஆகிவிடுவார். ஆனால், அவருக்கு இறைவனே 'குரு'வாக அமைய வேண்டும் என்பது இறை நாட்டம். எனவேதான், இறைவன் நாயகத் திருமேனியை அவரது இறுதி வரையில் ஒரெழுத்தும் மனிதரிடம் கற்காத 'உம்மி’ நபியாகவே இருக்கச் செய்திருக்கிறான். இப்படிப் பட்ட 'உம்மி’ நபிதான், உலகத்தில் எவருமே வலியுறுத்தாத அளவுக்குக் கல்வியின் மேன்மையை, சிறப்பை சிந்தை கொள் மொழியில் செப்பிச் சென்றுள்ளார் என்பது எண்ணி வியக்கத்தக்கதாகும்.

ஆணினும் பெண்ணுக்கே

இன்னொரு உணர்வையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கல்வி என்றாலே நாம் ஆண் மக்களைத்தான் நினைக்கிறோம். பெண் மக்களைப் பற்றி