பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225


வாசல்கள்தோறும் தொழுகை அழைப்பாக பாங்கு ஒலிக்கப்படுகிறது. ‘அதான்’ எனப்படும் ஒவ்வொரு பாங்கொலியிலும் இருமுறை பெருமானாரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. உலகில் குறைந்த பட்சம் பத்து இலட்சம் பள்ளிகளுக்குக் குறையாமல் இருக்கின்றன. அவற்றில் நாளொன்றுக்கு பாங்குக்கு இருமுறையாக, ஐவேளை பாங்குக்கு ஒரு கோடி முறை அண்ணலார் பெயர் உலகில் ஒலிக்கப்படுகிறது. அதுவும் இடையறாமல். எப்படி? இருபத்தியேழு கிலோ மீட்டருக்கு ஒரு விநாடி வேறுபடுகிறது. எனவே, பெருமானாருடைய பெயர் இருபத்தியேழு கிலோமீட்டருக்கு ஒரு விநாடியாக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருப்பதன் மூலம், பெருமானாரின் பெயரும் இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாமல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டேயிருப்பது உலக மகா அதிசயமாகும். அந்த அளவுக்கு அண்ணலாரின் திருப் பெயர் மக்களின் நினைவில் இருந்து கொண்டே இருக்குமளவுக்கு அன்னாரின் புகழ் நிலை பெற்றுள்ளது.

வழிகாட்டும் ஒளிவிளக்கு

பெருமானாருடைய பெயர் மட்டுமல்ல, அவரது வாழ்வும் வாக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகவே அமைந்துள்ளதெனலாம். அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் நேற்றும், இன்றும் ஏன் நாளைய மக்களின் வாழ்வின் முன்னேற்ற ஆதார சுருதியாக அமையும் பெற்றியைப் பெற்றுள்ளதாகும். இஃது நாம் மட்டுமல்ல, உலக முழுமையும் ஒப்புக் கொண்டுவிட்ட உண்மையாகும்.

வரலாற்றை மாற்றும் வல்லமை

தி ஹன்ரட்’ என்ற ஆங்கில நூலைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனை எழுதிய ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் என் இனிய நண்பர். தங்களுடைய

'