பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கிய கையோ அவர்தலையின் உச்சியில் பட்டென வீழ்ந்ததுவே. ஆங்கே தப்பிப் பிழைத்தகொசு அவரைப் பார்த்துக் கேட்டதுவே : சின்னஞ் சிறிய என்கடியைச் சிறிதும் பொறுத்திட முடியாமல், என்னை அடித்துக் கொன்றிடவே எத்தனம் செய்தீர். இப்பொழுது "பட்டென உமது தலைமீதே பலமாய் அடித்த உம்கையை வெட்டி எறிந்து விடுவீரோ ? வேறு தண்டனை கொடுப்பீரோ ?” கொசுவின் வார்த்தையைக் கேட்டதுமே கூறினர் அந்த மனிதருமே ; கொசுவே, இன்று தப்பியதால் குறும்பாய்க் கேள்வி கேட்கின்ருய். வேண்டும் என்றே என்தலையை விரும்பிக் கடித்த கொசுவே, கேள். வேண்டும் என்ரு என்கையும் வேதனை தந்தது : யோசனைசெய். 87