பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


தலைவர்சொல் பின்பற்றித் தமிழரெலாம்
   ஒதுங்கிவிட்ட தன்மை கண்டும்
நிலைமையறி யாமல்ஒரு சிங்கத்தின்
   எதிர்வாலை நீட்டி நின்று
அலைக்கழிக்கும் சிறுநரிபோல் உமையெல்லாம்
   சிறைக்குள்ளே அடைக்க வல்லோம்!
இலை எம்மைத் தடுப்பவர்கள் எனுமமதை
   அரசியலார்க் கேறிற் றன்றே!

மமதையினைத் தமிழரிடம் காட்டுகின்ற
   அரசியலை மட்டந் தட்ட
அமைத்தபடை வீரரொரு நூற்றுவரைத்
   திருச்சியினிள் றனுப்பி வைத்துத்
தமிழ்காத்துத் திரும்பிடுவீர் என வாழ்த்துக்
   கூறியந்தத் தமிழர் போற்றும்
தமிழ்த்தலைவர் ஈரோட்டுத் தாத்தாநற்
   சென்னைக்குத் தாமும் சென்றார்!

சென்னையிலே கடற்கரையில் மற்றுமொரு
   கடல்வெள்ளம் சேர்ந்த தேபோல்
மின்னனைய மாதர்களும் ஆடவரும்
   இளைஞர்களும் மிகுந்த ஆண்டு
சென்றவரும் தமிழகத்தார் எல்லோரும்
   சேர்ந்திருந்து செய்மு ழக்கம்
நின்றுகடல் செய்த அலை ஓசையினும்
   பெரிதாக நிறைந்த தன்றே!

எழுபதினா யிரமக்கள் தமிழ்வாழ்க
   ஒழிகஇந்தி என ஒ லிக்கக்
கிழவரவர் எனினுமொரு இளைஞரென
   முனைந்துதமிழ்க் கிளர்ச்சி செய்ய