பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர்

பெரியார்தம் சொற்பொழிவைச் கேட்டவர்கள்
   வெறுப்பகற்றிப் பெரியார் கொள்கைக்
குரியாராய் மாறுவதாம் விந்தையிதன்
   உட்பொருளைச் சொல்வேன், கல்வி
தெரியாத மக்களையும் வசப்படுத்தும்
   முறைமைதனில் திறமை யாக
உரைபகர்வார் தன்னுளத்துப் பட்டதெலாம்
   ஒளியாமல் உரைப்பார் கண்டீர்!

காற்றடிக்கும்! புயல் வீசும்! இடையின்றி
   மழைபொழியும்! கருத்து, வெள்ளம்
போற்பெருகும்! அருவிஎன ஓடிவரும்!
   மணிக்கணக்காய்ப் பொழியும்! பேச்சில்,
ஆர்த்திருக்கும் நாட்டிலுள்ள வகைப்பட்ட
   பழமொழிகள் அத்த னையும்!
சோற்றினுக்குக் காய்கின்ற ஏழைகட்குச்
   செயல்காட்டிச் சோர்வ கற்றும்!