பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

2. கற்கும் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஊட்டி உற்சாகப்படுத்துதல்.

3. மாணவர்கள் விரும்பும் வண்ணம் செய்முறை காரியங்களைத் தேர்ந்தெடுத்தல்.

4. அவற்றை நடை முறைப்படுத்திட சுலபமாகக் கற்பிக்கும் முறைகளைத் தேர்ந்கெடுத்தல்.

5. இந்த செயலால், இன்ன விளைவுகள் நிகழும் என்று எதிர்பார்த்து, திட்டமிட்டுக் கற்றுத்தருதல்.

6. இறுதியில் ஏற்பட்ட முடிவுகள் பற்றி, மதிப்பீடு செய்தல்.

இப்படித் திட்டமிடுகிறபோத, கற்பிக்கும் முறையில், ஆசிரியர்கள் இரண்டு கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.

1. தனிப்பட்ட மாணவர்களின் உடல், வயது, இனம், பற்றிய வேறுபாடுகளை அறிந்து, அதற்கேற்ப கற்பித்தலை வலியுறுத்தல்.

2. தனிப்பட்ட அனைவரையும் ஒன்று கூட்டி; ஓர் அமைப்பாக இயங்க; அந்த அமைப்பு சமுதாய, அமைப்பாக பின்னாளில் உருவாவது போல, செயல்பட வைத்தல்.

இந்த இரண்டுக் கருத்துக்களின் பின்னணியில், சுதந்தரமாக வாழும் தத்துவமும்; சுகம் தரும் வாழ்வுத் தத்துவமும் அடங்கிக் கிடக்கின்றன.