பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மொழியின் பெயராய் ஓநாய் வேதாந்தமா? இந்தத் திருநாட்டில் பிறந்திட்ட நாமெல்லாம் ஆன்றோர் அமைத்தளித்த அரு மரபுதனைக் காத்தல் நீங்காத நிற்கடமை என்பதனை உணர்கின்றோம். ஏறுநடை போட் டிடுக! ஏற்றமிகு நிலையதனை இந்நாடு பெற்றிடவே உம தாற்றல் பயன்படட்டும் என்றெல்லாம் புலவர் பெருமக்கள் கூறிநிற்கின்றார்கள்; காண இயலவில்லை. கேட்கின்றோம். அவ்வுரையை. பாண்டிய நாடிதற்குப் பங்களித்த மாமதுரை, தமிழ் மரபு காத்திட்ட மன்றம் கண்ட மதுரை, தேமதுரத் தமிழோசை திக்கெல்லாம் எழச் செய்த திருமதுரை, வீரப் போராற்றலாம் மட்டுமின்றி அறிவுக்கணை தொடுத்த மாண். பினாலும், பெருமைதனைப் பெற்ற வெற்றிக் கோட்டம், "அந்த நாளும் வந்திடாதோ! என்ற உணர்ச்சியால் எவரும் உந்தப்படும் நிலைபெறுவர், மாமதுரைப் பதியின் வரலாற்றுச் சிறப்பறியின்! ஆம்! ஆயின் ஏக்கம் நமக்கெதற்கு? அந்நாட் சிறப்பினை இந்நாளும் கண்டிடலாம். இவரெல்லாம் அதற்கே ஒப் படைத்துள்ளார்கள். இவர் ஆற்றல் துணைகொண்டு, தமிழ் மரபும் தமிழ் மாண்பும் என்றும் ஒளிமயமாய்த் திகழ்ந்திடச் செய்திடலாம் என்றோர் உறுதியினைப் பெறுகின்றேன்; பெறுகின்றேன்; பெற்றிடச் செய்கின்றீர்; பெரும் புலவர் களாம் நீவீர் பட்டமளிப்பு விழாவினிலே பாங்கு!.டனே. வந்துள்ள அறிவரசராம் நீவிர்: உமக்கென்ன உரைத்திட உளது? உம் உள்ளம் அஃதறியும். உமது பெரும் பேராசிரியர் கருத்து அளித்துள்ளார்; என் கடன் நீரறிந்ததனை மீண்டும் நினைவு படுத்துவதேயாகும். மயில் ஆடுவது பிறர் கண்டு மகிழ! பட்டம் பெறுவது தொண்டு புரிய! பட்டம் பெற்றிடுகின்றீர்! பல்கலையில் வல்லுநர் ஆகின்` றீர்! பல்கலைக் கழகம் ஈன்றெடுத்த நன்மணிகளாகின்றீர்கள்;