பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 இன்று நம் கரங்கள் கேட்கும் கரங்களாக இருக்கின்றன- நாம் அரிசி,நிதி கடன் கேட்பவர்களாக இருக்கிறோம். இந்த உண்மையை உணர்ந்து, இந்தச் சவாலை ஏற்று தன்னிறைவுப் பாதையில்-தன்மானப் பாதையில் நாம் வேகமாக நடைபோட வேண்டும். அந்தப் பாதை நீண்ட நெடியது. அதில் நடக்க நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும். நல்ல மனிதர்களாய், நற்குணமுடையோராய், புகழ் ஓங்கி எல்லா வகை ஏற்றமும் பெறத்தக்கவர்களாய் நமது சிறார்கள் வளரவேண்டும்.