பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73 களை சொல்லி தமிழ் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க உதவ வேண்டும். பக்தவத்சலம் அவர்களுடைய குடும்பம் நிலச்சுவான்தார் குடும்பம். சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பு என்று ஒப்புக்கொள்ளப் பட்டவகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். மேட்டுக்குடியில் பிறந்தவர் என்றாலும் அவருடைய முன்னோர்கள் தேசியத் திவ் பற்றுள்ளவர்களாக இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் ஊருக்கு பக்தவத்சலம் அவர்கள் தன்னுடைய தந்தையோடு வரும்போது தான் பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் வெகு அடக்கத்தோடு வருவார். எனக்கும் அவருக்கும் பத்தாண்டு காலமாக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் பத்திரிகையில் வரும் விஷயங் களைப் பார்த்து எடைபோடுகிறார்களே தவிர எங்களுக்குள்ள நட்பைச் சிலர் புரிந்து கொண்டது இல்லை. சட்டமன்றத் தில் பணியாற்றியபோது நான் கூறிய பலவற்றை அவர் மறுத்திருக்கிறார். அவர் கூறியவற்றை நான் மறுத்து இருக்கிறேன். எந்த பண்டத்தை எடுத்தாலும் தூற்றி. நல்லதை எடுக் கிறார்கள். நாம் கூட தூற்றுகிறோம். மாலை நேரத்தில் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்கிற. நேரத்தில் தேவையற்றதை தள்ளிவிட்டு நல்லதை எடுத்துக்கொள்ள முயற்சித்தால் பலன் உள்ளதாக இருக்கும். யார் மீதும் எனக்கு எந்த நேரத்திலும் வெறுப்பு இருந் தது இல்லை. பகை உணர்ச்சி கூடாது. அவரவர்கள் தங்கள் கொள்கைகளை வலியுறுத்துவதில் ஈடுபட்டாலும் அதிலே பகை உணர்ச்சி தேவை இல்லை.