பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85 இதையெல்லாம் நான் கூறக் காரணம், நண்பர் வெங் கட்ராமனிடம் இந்த குணங்கள் நிரம்ப உண்டு என்பதா லேயாகும். இந்தக் குணங்கள் எங்கு தேவைப்படு கிறதோ அந்த இடத்துக்கு வழங்குகிறோம், வெங்கட்ராமனை அங்கு அனுப்புவதன் மூலம், அவர்களிடமிருந்து நாம் பெறுவதெல்லாம் இங்கிருந்து அவர்கள் வரியாக எடுத்துச் சென்றதில் ஒரு பகுதியே. நான் இனி ஒவ்வொரு மாதமும் கையில் ஒரு பட்டிய லோடு டில்லியில் வெங்கட்ராமன் அறைக் கதவைத் தட்டு வதாக இருக்கிறேன். அப்படித் தட்டத் தேவையில்லை; கதவு திறந்தேயிருக்கு மென்கிறார் வெங்கட்ராமன். கதவு திறந்தேயிருந்தாலும் தட்டி விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டு மென்பது ஆங்கிலேயே முறை. நாம் கொடுக்கும் திட்டங்களை உறுப்பினர் முன்வைத்து நமக்கு நியாயம் வார் என்று நம்புவோமாக! திட்டக்குழுவின் சக கிடைக்கச் செய் வெங்கட்ராமன் தமது பதவியில் சிறப்பாகச் செயலாற் றும் பரிவு செலுத்துவோம் -தமிழ் மக்களின் நல்லெண்ணமே அவருக்குச் சிறந்த பக்கப்பலமாக இருக்கும்.