பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87 அதே போலத்தான் பெரியார் அவர்கள் இங்கே பூரித்த நிலையிலிருக்கிறார்கள். இந்த மணவிழாவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ஓடியாடி வேலை செய்ததைப் பார்த்து எல்லோரும் என் மக்கள்தான்; நம்மாலே பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்தான் என்று பெரியார் பெருமைப் படுவார். 2 இந்தப் பெருமை உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் கிடைத்ததில்லை. பெரியார் அவர்கள் தமிழ் போல என்றும் இளமையோடு இருந்து எந்தக் குழந்தையும் தப்பிப்போ- காமல் -- அவர்கள் எந்தக் கட்சியில் எந்தத் துறையில் இருந் தாலும் அவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிக்கு மெய்யாகத் தொண்டாற்றும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்- பார்த்துக் கொள்வார். என் பொதுவாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் பெரியார். நான் அவரிடமிருந்து பிரிந்து சென்ற போது ஒன்றைக் குறிப்பிட்டேன். நான் புதிய தலைவரைத்தேடி அய்யா அவர்களிடமிருந்து பிரிந்து செல்லவில்லை' என்று குறிப்பிட்டேன். அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறேன். குன்றக்குடி அடிகளார் இங்குப் பேசினார், அவர் எத்தனையோ மணமக்களை வாழ்த்திப்பேசியிருப்பார். ஆனால் அவருக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று. எண்ணம் ஏற்பட்டிருக்காது. அதேபோல அடிகளார் கம்பீரமாகக் காட்சியளிப்பதைப் பார்த்து எந்த வாலிபருக்கும் அவரைப் வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டிருக்கால் துறவியாக: அவரவர்ளக உள்ள கொள்கைப்படி நடப்பதும், என்ன நெறிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றுவதைக் கடமை