பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重岔夺 லா. ச. ராமாமிருதம் மண்டை உச்சியில், அசையாத சிறகு விரிப்பில், பருந்து குடை நீந்துகிறது. கிளைகளில் மலர்களும் இலைகளும் கிசு கிசு. கிணற்றடி யில் தென்னையில் குலைகுலையாக முலைகள். தொலை தூரத்தில், நாயின் தனித் தனிமையின் குரைப்பு: தெருவில் புழுதி எழுப்பிக்கொண்டு ஒரு கார் பறக்கிறது. இத்தனையும் சேர்த்து வாங்கின. ஒரு பெருமூச்சு, அதன் விசனத்திலும் அசதியிலும் மிரண்டுபோகிறேன். எங்கிருந்து வந்தது? மரங்களிலிருந்தா? காற்றா? பூமியா? அல்ல நானேதானா? நான் என்கையில் இது வெறும் என் தனி உயிர் அல்ல.

  • நான்" என்னும் இந்த ப்ரக்ஞையின் பெருமூச்சு. ஆகாசம் வரை வியாபித்த கணத்தின் அசதி,

நேரம், தூரம் தாண்டி, எங்கிருந்தாலும் உன்னைத் தொட, மொழியின் உருவாம் எழுத்து. இந்த பூமி, ஆகாசம். காற்று இவைக்குமேலும் இன்னும் ஏதேதோவையையும். உன்னையும் என்னையும் எல்லா வற்றையும் அதற்குமேலும், நினைக்க முடிந்தது. முடியாத தையும் கவ்விக்கொண்டு எங்கும் நிறைந்ததாய் - மோனம். Absolute கேள்வியுமில்லை, பதிலுமில்லை, அர்த்தமு மில்லை, ஒலிகள், ஓசைகள் அசைவுகள், கணங்கள் நயங்கள் தன்னுள் வாங்கிக்கொண்ட Absolute கர்ப்பம், {露凸f了öfr品仔a矿打一 விளிம்பு நிலை. இது ஒரு தருணம்: தருணங்கள் லதா நம்மைச் சுற்றி நீந்திக் கொண்டிருக் இன்றன. அதை வேண்டிப் போனால் பிடிபடாது, ஆனால், தானாகவே பின்னால் வந்து தோளைத் தொட்டு அது தாங்கி வந்த சேதி மோதி, பூரித்து பட்டவனையும் பூரித்து, விடும் தருணம்.