பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟密器 லா, ச. ராமாமிருதம் இந்தத் தொடல் அவசியம்தானா? இல்லாமல் இருக்க முடியாதா? involvement இன்னும் எதற்கு போதுமடா போதும் தொடலின் விளைவுகள். உறவே தொடல்தானே! பூமியில் விழுந்ததுமே குழவி பின் முதல் கூவல் உறவின் கூவல்தானே! அங்கிருந்தே தொடலின் ஆதிக்கம் தொடங்கியாச்சு தொட்டால்தான் தொடலா? எனக்கு என்னாலே உறவுதான். உறவு தப்ப முடியாத்து. அன்றோரு நாள், தெருவில் போய்க்கொண்டிருக் கையில், காற்றில் அலைந்து வந்து ஒரு காயிதம் காலைச் கற்றிக்கொண்டது. குனிந்து எடுத்துப் பார்த்தால்பாலாஜி, ஆமாம், புது வருடம் புதுக் காலண்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. 翁 磷鼠 F ஸ்டார்களுக்கெதிரே பெருமாள் எங்கே எடுபடுவார்? வெய்யிலில் காய்ந்து, மழை யில் நனைந்து சோகை பிடித்திருந்தார். கீழே போட்டுவிட்டுப் பத்தடி நடந்தேன். ஊனும் நடை தடுத்துவிட்டது. கண்ணாடி போட முடியாது, அவர் கன் கேட்கும் விலைக்கு, இருந்தாலும் திரும்பிச் சென்று எடுத்துக் கையால் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு பிடித்துப் பையில் சொருகிக்கொண்டேன், முகத்தையே அடைக்கும் நாமம் வழியில் கண்பட்ட இந்தப் படத்தை உதற முடியவில்லை. zh 怒 # , ళ * : : & 烹 * உறவைத் துற' என்று போதிக்க வாய் எங்கே இருக்கிறது? உறவைத் தப்பமுடியாதென்கையில் அத்துடன் இன்றி. யமையாத விளைவு துரோகங்களையுக் சேர்த்துத்தான்.