பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&盛 லா. ச. ராமாமிருதம் யும். மிகவும் சுவாரஸ்யமான நிலை. அந்த இடத்தில்தான் திசை மாறாமலோ, வேறு அலைகளிலோ, சுறாமீனிலோ மாட்டிக்கொள்ளாமல் ஒடத்தின் திக்கின்மேல் உஷாரா விருக்க வேண்டிய பொறுப்பு தவிர: மற்ற கவலைகள் குறை யும். ஸ்வாரஸ்யமான நிலை. சொற்களும் விட்டிற்பூச்சி போன்றவை. சிந்தனை அருவியில் மாட்டிக்கொண்ட பின் அவைகளுக்கு, மூலப் பொருளின் ஈர்ப்பிலிருந்து தப்பவும் வழியில்லை. உடனே மாட்டிக்கொள்ளவும் மனமில்லை. தவிக்கின்றன. கன்னா பின்னாவென்று பெருகுகின்றன. அணி அணியாக வகுக் கின்றன எங்களில் பொருத்தமானதை எடுத்துக்கொள் என்று சவால் விடுவதுபோல் இது Creative processஇல் ஒரு வெகு சங்கடமான நிலை. (சில சமயங்களில் பவழ மாலையில் ஒரு Outsize பிதுங்கு வதுபோலும்: தேவர்கள் பந்தியில் ராகு, கேது திருட்டுத் தனமாக உட்கார்ந்தது போலும் ஏதேனும் ஒரு சொல் (இந்த இடத்தில் சொல் எனும் பிரயோகம், ஒரு வார்த் தையையோ சொற்றொடரையோ வாக்கியத்தையோ குறிக்கும்) தனக்கென்று தனி உருவம் எடுத்து விளையாட்டு காட்டும் ) அதன் தனி உருவில் அதற்குள்ள மேனகைத் தனத்தில் மயங்கிவிடாமல் தன் தவத்தை இழக்காமல் குறி வில் முறுக்கேறிக் கொண்டேயிருக்கும் கவனமுனைப்பு தவறாமல் இது மாயா சீதையா, வேதவதியா, இந்தப் படைப்பில் இந்த சொல்லுக்கு என்ன இடம்? உண்டா இல்லையா என்று GEffiau Galain Già · Creative processgép தோன்றிய இந்த வேறான சொல்லுக்கு உருவாகிக்கொண் டிருக்கும் படைப்பில் உண்மையில் இடமில்லையேல் மாயா சீதையை வெட்டி வீழ்த்தல் வேண்டும். கலைஞனின் கலை உணர்வு இரக்கமற்றதாக இருத்தல் வேண்டும். (Artistry