இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெற்றதாய் போனஉடன்,
பூத்தமலர்க் கொடியாள்
முற்ருத மாம்பிஞ்சை
வெட்டிவைத்துக் கொண்டிருத்தாள்.
★
கதிரடித்து நெல்குவிக்கும்
களத்தில், ஒருபுறத்தில்
முதிர்ந்த வயதுடையாள்
வியாபாரத்தைத் தொடர்ந்தாள்.
★
செந்துாரப் பொடிபோலே
செக்கச் சிவந்திருக்கும்
அந்திப் பொழுதினிலே
ஆகாயத் தின்மேலே
சாய்ந்திருக்கும் குரியனை
சஞ்சரிக்கும் மேகத்தை,
வாய்கிறந்து கூவுகின்ற
வர்ணப் பறவைகளை,
பட்டங்கள் வால் அவிழ்ந்து
பறக்கின்ற காட்சிதனை
சுட்டும் விழியாலே
சுவைபார்த்துக் கொண்டிருந்தாள்,
அங்காடிக் காரிபெற்ற
அருமைமகள் கண்ணம்மா.
மங்கைஅவள் இவ்வாறு
இருக்கும் தருணத்தில்,
11