4
உதயம்
திரணிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருங் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலேயே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. 2
கூவின பூங்குயில் கூவின கோழி -
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஒவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணே காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 3
இன்னிசை வீணை யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கைய ரொருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 4
பூதங்கள் தோறும்நின் ருயெனின் அல்லாற்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோமுனேக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்ன
சிந்தனைக் கும்மரி யாயெங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்பள்ளி எழுந்தரு ளாயே. 5