பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51————————||||

உப்புமண்டித் தெரு

ஒரு
பனிரெண்டு வயசு
பாவாடை
கதவைத் திறந்து
பிள்ளையை
உள்ளே அழைத்துச் சென்றது...


திறந்திருந்த
ஒரு அறைக்குள்
ஒருத்தியின்
அரவணைப்பின்
திளைத்துக் கிடந்த
கதிரவனர் -
திடீரென்று
அங்கு
தன் தந்தையைக் கண்டதும்
அதிர்ந்தான்!


அவளுடைய
மார்பிலிருந்து
தன் முகத்தை
பெயர்த்துக் கொண்டு
சுதாரித்தவனின்
இருபது வயது
இளமேனி நடுக்கிற்று!