பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ. கோ. சண்முகம்

||||————————52

நிர்வாண உடம்பில்
துண்டை சுற்றியபடி
அத்துமறி
அறைக்குள் புகுந்த
ஆசாமி மீது பாய
ஆத்திரத்தோடு
திரும்பிய அவள்
அதிர்ந்தாள்!


"அய்யா! நீங்களா?"
பிள்ளையும்
அதிர்ந்தார்...


"கனகா! நீயா?”


மூன்று
படகுநோட்டுகளை
கனகாவின் முகத்தில்
விட்டெறிந்து விட்டு
"இதோட விட்டுடு இவன!
உனக்குப் புண்ணியமா போகட்டும்!"
என்று சொல்லியபடி
கதிரவன் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு
அங்கிருந்து வெளியேறினார்
பிள்ளை!