பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366


‘ஒ, அல்லா! ஒரு காலிப் அவர்களுடைய கடிதத்தைத் தாடி கூடவெட்டிக் கொள்ளவியலாத ஓர் ஏழைக் காவற்காரனிடம் கொடுக்க வேண்டுமா? இது என்ன தெரியுமா? கெய்ரோ நகரத்துக் காலிப் அவர்கள், தன்னுடைய சாதாத்தைக் கணிப்பதற்காக அறிஞர் உமார் கயாமை வரச்சொல்லி எழுதிய கடிதம். நான் அவரை, கெய்ரோ ராஜசபைக்குச் சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்ல வந்த தூதுவன்.’ என்றான்.

‘உண்மையாகவா?’ என்று விடுதிக்காரன் வியப்புடன் கேட்டான்.

தன் இடுப்பிலிருந்து, முத்திரையிட்ட ஓர் உறையை எடுத்துக்காட்டி, ‘பார், சந்தேகந்திரப் பார்’ என்றான் அந்த ஆள்.

‘உண்மைதான்! கழுகுக்கூட்டுத் தலைவன் ஹாஸான் உங்கள் காலிப்புடன் இருக்கிறான் என்பதும் உண்மைதானே!’ என்று உமார் கேட்டான்.

அதைத் தெரிந்துதொள்ள நீ யார்? நீ சொன்னது உண்மைதான், ஆனால்...நீ...’

பேனாவும் மையும் கொண்டு வா!’ என்று விடுதிக்காரனுக்குக் கட்டடளையிட்டான் உமார்.

‘பேனாவை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்த விடுதிக்காரன், அவனுக்கு எழுதத் தெரிந்தால் அவன் சாதாரண காவற்காரனாக இருக்க மாட்டான்’ என்று கூறினான்.

உமார் கடித உரையை வாங்கினான். அது நீளமாகவும், கனமாகவும் இருந்தது. அதைத் திருப்பி அதன்மேல் எழுதினான்.

‘ஆழ்ந்த நூலின் ஆராய்ச்சி அதனை வாழ்வாய்க் கொண்டிருந்தேன் வாழ்ந்த வாழ்க்கை நூலதனை வாளால் அறுத்துக் கெடுத்தாரே! பாழும் விதியின் செய்கையடா பாடும் மனிதப் பொம்மையடா தாழ்ந்த என்னை விற்பதற்கே தரகன் வந்து கூவுகிறான்!’

இதையெழுதி அவனிடம் கொடுத்தான்.

கடிதத்தைத் திரும்ப வாங்காமல், அந்த மனிதன், தாங்கள் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவில்லையே!’ என்று கேட்டான்.

‘அதில் என்ன எழுதியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்!’