பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1






1. உயிரின் அழைப்பு


"நேற்றையிலே இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்! ஆனால் அதைப்பற்றி இனிமேல் தர்க்கம் பண்ணி உபயோகமில்லை! இப்போ நீ போய் பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டுவா; போனதுபோக, மிச்சமிருக்கிற மானத்தோடாவது ஊர்போய்ச் சேர்வோம். அவன் பணமுமாச்சு, அவனுமாச்சு......"

"இரையாதே சாமா. நன்றாக இராது. கலியாணம்னால் நாலும்தாண்டா இருக்கும், அதோட... சம்பந்தி உன்னை இங்கே நிறுத்திக்கணும்னு ஆசைப்படறாராம்......"

கோபத்துடன் தாயாரைக் கூர்ந்து பார்த்தான் சுவாமிநாதன்.