பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர். வதைபடும்... 102 இயற்கை நியதிகளில் பிறப்பு, வளர்ச்சி, இனப்பெருக்கம், இயற்கையோடிணைந்த உயிர்களை அரவணைத்துச் செல்லும் அமைதி, ஆனந்தம் என்ற இலக்குகள் குலைந்துவிட்டன. நோய்த் தடுப்பு மருந்துகள், குறிப்பாக, ஆன்டிபயோடிக்' என்ற நச்சுத்தொற்றுக்கு மாற்றான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின், உலக முழுவதும் மனிதர் வாழ்நாள் நீட்சி பெற்றிருக்கிறது. 1950 - 55க்கு முன் வாழ்நாள் 46 வயதாக இருந்தது; பின்னர் அது 65 ஆக உயர்ந்தது. இது 2045 - 2050 இல் 75 ஆக உயரும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், முன்பிருந்த சிசுமரணங்கள், பிரசவகால மரணங்கள், டைபாய்ட், காலரா போன்ற கொள்ளை நோய்கள் ஆகியவை கட்டுப்படுத்தப் பட்டதாலும், இறப்புகள் தடுக்கப்பட்டு பிறப்புகளும் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. இயற்கை நியதிகளின் ஒழுக்க விதிகளை மீறுவதை மனிதர் அறிவியல் சாதனைகளாக ஒருபுறம் மார்தட்டிக் கொண்டாலும், அமைதியான சுக வாழ்வு என்ற இலக்கு வெறும் வாய்ப்பந்தலாகவே இருக்கிறது. எனவே முன்பு தெரிந்திராத ஆட்கொல்லி, தேய்வு நோய் - எய்ட்ஸ் எதிர்காலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. காசநோய், அறைகூவலாக இருந்தது. கான்சர் என்ற புற்றுநோய், உயிர் குடிக்கும் மஞ்சட் காமாலை எல்லாவற்றுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் உலகெங்கும் அறிவியல் சார்ந்த முனைப்பைத் தீவிரமாக்கி இருக்கின்றன. கருத்தடை என்று வரும்போது, ஆண்களுக்கான எளிய முறைகளை அறிவார்ந்த விழிப்புணர்வுடன் கூடிய சமுதாயங்கள் பரிந்துரை செய்கின்றன, பயன்படுத்துகின்றன. காண்டோம் என்ற ஆணுறையை, நிரோத் என்ற பெயரில், மக்கள் தொடர்பு சாதனங் களாகிய சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் பரவலாகப் பிரசாரம் செய்கின்றன. இந்தச் சாதனத்தைப் பயன்படுத்த மருத்துவர் தேவையில்லை. எங்கும் கிடைக்கக்கூடியது. ஆணுறையில் "சறுக்கல்கள்' இல்லாமல், நிச்சயமாகப் பயன்படக்கூடிய பல்வேறு மாற்றங் களுடன் திருந்திய மாதிரிகள் வந்திருக்கின்றன. உலகெங்கும் ஐம்பது கோடி ஆண்களுக்கு மேல் இந்தத் தடைச் சாதனத்தைப் பயன்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது.