பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 105 இவர்களுக்குப் பாலியல் சார்ந்த ஆக்கிரமிப்பு, வன்முறைகள் எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும் நேரலாம் என்ற நிலையில், கருக்கலைப்பு நிலையங்கள் கடவுளளித்த பிரசாதம் போல் தோன்றுகின்றன. ஆனால் போதுமான மருத்துவப் பயிற்சியாளர் இல்லாத நிலையில் முன்கூறப்பட்ட பரம்பரைத் தொழிலாளருக்கு நவீனமான முறைகளைப் பயிலச் செய்யும் முயற்சியும் நிகழ்கிறது. ஒரு குடும்பப் பெண் ஆசாரமான குடும் பம். கோயில் கொடைவிழா, திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள், இந்த நாட்களில் வீட்டுவிலக்கு வந்துவிட்டால், மிகவும் கடினம். நாட்கள் தள்ளிப்போக, கை மருந்துகள் உண்டு. வெறும் வயிற்றில் கேழ்வரகுக் களி, மோரில் அரிசிமாவு போட்டு ფალცნ வாரம் முன்பிருந்தே அருந்துதல் என்பன போன்ற நச்சுப் பொருள் இல்லாத வகையில் மருத்துவம் செய்துகொள்வார்கள். அந்த முறைகள் பயனளித்தனவோ இல்லையோ? பயனளித்தால் நன்று; இல்லையேல் விதியின் பேரில் பழிபோட்டுக் கொள்வார்கள். ஆனால் இதற்கெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளாக மாத்திரைகள் வந்தபின், கூசாமல், கடைகளில் வாங்கிப் போட்டுக் கொண்ட குடும்பப் பெண்கள், பதினைந்து, இருபது ஆண்டு களுக்குப் பின்னரும் மாதவிலக்கு ஒழுங்காக இல்லாதது மட்டுமின்றி, தலைநோவு, எரிச்சல், மனஉளைச்சல் என்ற பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். விளையாட்டுப் போல் "ப்ரோமாலிட் - என்’ மாத்திரைகளை உட்கொண்டு குடும்பம் பேணிய பெண்கள், லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய வழிபாடு என்பதுபோல, இதுபோன்ற ஹார்மோன் களுடன் விளையாடும் மாத்திரைகளை இளைய தலைமுறையின் சறுக்கல்களைத் தடுக்க சஞ்சீவினி மருந்துகளாகப் பயன்படுத்தும் நவீனம் வந்திருக்கிறது. ஒருவகையில் இந்த மாத்திரைகளும், கருச்சிதைவு செய்யக் கூடியவையே. நிணநீர்ச் சுரப்பிகளின் இயல்பான செயல் பாட்டை மாற்றியமைக்கும் வகையில் சினை முட்டை கருத்தரிக்க இயலாமல், தடுக்கின்றன. வாந்தி, ஒவ்வாமை போன்ற பின் விளைவுகள் இருக்கலாம். மருத்துவரிடம் தொடர்ந்து அறிவுரை பெறவேண்டும். பரிசீலனைக்கு உட்பட வேண்டும். இதெல்லாம் பாடப்புத்தகங்களில் கூறியிருப்பது போன்று நடைமுறைக்கு நூற்றுக்கு நூறு சாத்தியமில்லாததாகும்.