பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 107 என்றாலும், மாத்திரைகள், நிணநீர்ச் சுரப்பிகளின் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைக்கும் வகையில் சினைமுட்டை கருத்தரிக்க இயலாமல் தடுக்கிறது. வாந்தி, ஒவ்வாமை போன்ற பின்விளைவுகள் இருக்கலாம். மருத்துவரிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். பரிசீலனைக்கும் உட்பட வேண்டும். இதெல்லாம் பாடப் புத்தகங்களில் கூறியிருப்பது போன்று நடை முறைக்கு நூற்றுக்கு நூறு சாத்தியமில்லாததாகும். அன்றிலிருந்து இன்றுவரை தெரிந்ததும், நடைபெறுவதும் கருவைச் சிதைக்கும் முறைதான். பணம் படைத்தவர் மாத்திரை களை வாங்கிப் போட்டுக் கொள்ள முடியும். தொலைக்காட்சித் தொடர் நாயகிபோல் டாக்டர் அறியாமலே மாத்திரை வாங்கிப் போட்டுக்கொள்ள முடியும். இந்த வசதிகள், ஒரு வகையில் பெண்களுக்கு மிகவும் இன்றியமையாத மன உறுதி - தீவிரமான நெறிசார்ந்த உணர்வுகள், ஓர் இலக்கை நோக்கிச் சமுதாய மேம்பாடு தொடர்பாகச் செயல்படக் கூடிய துணிவு முதல், எவ்வகையிலும் முன்னேறவிடாமல் தடுக்கும் ஆணாதிக்கத்தை எதிர்நோக்கும் மனஒருமை ஆகியவற்றைச் சிதைக்கின்றன. பொருளாதார சுயச்சார்பு, கல்வியறிவு உரிமைகள் தேடிப் பெற்ற இந்தத் தலைமுறை இளம்பெண், இன்று முழுவதுமாக விடுதலை பெற்றுவிடவில்லை என்ற சமுதாய நிலை - அன்றாடம் நிகழும் பாலியல் சார்ந்த வன்முறைகள், கொலைகள், தற் கொலைகள் போன்ற அழுக்குக் குமிழிகளில் வெளிப்படுகிறது. இவள் பூரண விடுதலைபெற, ஒருங்கிணைந்த சமுதாயபூர்வமான தன்னலமற்ற இலக்கில் செயல்பட வேண்டும். மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரை செய்யாத வகையில் வாணிபம் செய்யும் மாத்திரைகளை விற்பதை இவர்களைப் போன்றவர்கள் எதிர்க்க வேண்டும். அது நிகழ்வதே இல்லை. 18. இருத்தலுக்கான போராட்டம் ந்திய நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இனப்பெருக்கத்தை ஊக்கு விக்கும் பருவத்தில் இருக்கும் நிலையில் கட்டுப்பாட்டு அவசியம்