பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 119 யாரோ ஒர் ஆண் உறவினர் பேரில்தான் நிலம் இருக்கிறது. ஆண் பிள்ளை மட்டுமே வேண்டும் என்ற மனப்பாங்கு வேரோடு கிள்ளி எறியப்படவில்லை. ஆண் அறுவைச் சிகிச்சைக்கான முகாம் என்று அறிவிப்புச் செய்து இலக்கு வைத்திருப்பதாக அறிக்கை வருகிறது. மிக நவீனமான எளிய சிகிச்சை என மருத்துவர் கூறுகிறார். இது நடக்காத காரியம், ஒன்றிரண்டு பேர் வந்தாலே பெரிது. ஆனால் பெண்கள் கருக்கலைப்புச் செய்துகொள்ள வசதியாக காலை எட்டு மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரையில் குறிப்பிட்ட மருத்துவமனைகள் திறந்திருக்கும். எந்த வினாவும் கேட்காமல் வருபவர்கள் வசதிக்கேற்ப கருக்கலைப்பு செய்யப்படும். கட்டண மின்றி, லூப் சாதனங்கள் பொருத்தப்படும். இது மிக அண்மையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் குடும்பக் கட்டுப் பாட்டுக்கான தீவிர நடவடிக்கை. இந்த வசதிகளை உண்மையில் நாணயமான குடும்பப் பெண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனரா? ஒரு பெண்ணுக்குப் பதினான்கு வயதிலிருந்து சுமார் முப்பது ஆண்டுகள் கருத்தரிக்கக்கூடிய காலம் எனலாம். ஆனுக்கோ, ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள், பிள்ளையைக் கொடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது எனலாம். தாமதமான திருமணம் என்றால் இருபத்தைந்து என்று கொள்ளலாம், பெண்ணுக்கு. இனக்கவர்ச்சி தோன்றும் பருவத்தில் மனக்கட்டுப்பாட்டுக்கு வேண்டிய சூழல் இன்று அறவே இல்லை. ஒருவகையில் பார்க்கப்போனால், பெண்ணின் தாய்மைப் பகுதி வெறும் கருக்குழாய்த் துண்டிப்போ கருப்பைச் செயல்பாடுகளோ, அவளுடைய அந்த ஒர் உடற்கூறியலுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. கருப்பையைக் கவ்விப் பற்றியிருக்கும் கருவைப் பெயர்த்துச் சுத்தம் செய்வதுடன் கருப்பைச் செயல்பாடு ஒய்ந்து விடுவதில்லை. அவளுடைய முழு இயக்கத்தில் கருப்பைச் செயல்பாடு ஒரு பகுதி மட்டுமே. தாய்மைப் பண்புகள் கருப்பைச் செயல்பாடு இருந்து, ஒரு பிள்ளையைப் பெற்றால் இயல்பாக மலருகிறது. குடும்பம் என்ற அமைப்பில் சுற்றமும், கொண்டவனின் அன்பும் இயல்பாக அதை மலரச் செய்கிறது. கணவன் மனைவியரில் கருத்து வேற்றுமையில் பிணங்கி இருந்தாலும், மணமுறிவுவரை போகாது. ஒரு குழந்தை பிறந்தால் இருவரையும் அது இணைத்துவிடும்’ என்றுதான் பெரியோர்