இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குரங்குகளுக்குப் பிறகே மனிதன் தோன்றினான் என்றால் அதற்கு ஆதாரம் எங்கே?
இதுதான் ஆராய்ச்சியாளர் கேள்வி. ஆகவே, குரங்குகளுக்கும் மனித குலத்துக்கும் இடையே உள்ள எலும்புகளைத் தேடத் தொடங்கினார்கள்.
ஜாவாவிலே ஊராங் ஊட்டாங் என்ற குரங்கினம் இருக்கிறது. ஆங்கே போய் தேடினால் ஏதாவது கிடைக்கலாம் என்று நினைத்தார் ஓர் அறிஞர். அவர் பெயர் டூபி.
ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணுற்று ஓராம் ஆண்டு ஜாவா தீவிலே உள்ள ஸோலோ நதிக்கரையிலே சில மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் கண்டு எடுத்தார் அவர். 'குரங்குகளுக்குப் பின் தோன்றிய ஆதிமனிதன் இவனே' என்றார் அவர்.