பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உலக அறிஞர்களின்


40. வறுமை

தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன்.

-பால் ரிச்சர்ட்

உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர்.

-பால் ரிச்சர்ட்

வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர்.

-ஆவ்பரி

வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.

-கதே

வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.

-பெர்னார்ட்ஷா

வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.

-மாஜினி

எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.

- ரஸ்கின்

யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது.

-செஸ்டர்ட்டன்

செல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும்.

-பால் ரிச்சர்ட்