இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
119
உலக அறிஞர்களின்
46. தருமம்
பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு.
- ப்ரெளண்
பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம்.
-மான்
'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.
- ஸிஸரோ
என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.
-
ஸெனீக்கா
ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே.
- டூமாஸ்
த்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது.
- கே
நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும்.
-மாக்கன்ஜி
பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும்.
-புல்வெர்
உடைமை என்பது கடனே செல்வமே சிந்தையின் உரைகல், பொருள் வைத்திருப்பது பாவம், அதை வழங்கிய அளவே மன்னிப்பு.
-பால் ரிச்சர்ட்