இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
உலக அறிஞர்களின்
எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி.
-போப்
வறுமையேயாயினும் மனத்தில் திருப்தி உண்டேல் அதுவும் போதிய செல்வம் உடைமையே ஆகும்.
-ஷேக்ஸ்பியர்
ஒன்றுமில்லாமை எப்பொழுதும் சுகம், சில சமயங்களில் சந்தோஷமும் கூட வறுமையுற்றாலும் திருப்தியுள்ளவனே பொறாமைப்படத் தகுந்தவன்.
-பிஷப் ஹால்
அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.
-கோல்ட்ஸ்மித்
குதுகலமும் திருப்தியும் சிறந்த அழுகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை.
-டிக்கன்ஸ்
★ ★ ★
48. உதவி செய்க
'உதவி செய்க' என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் 'பிரிந்திரு' என்பதே.
-ரஸ்கின்
விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காகவன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான்.
-ஷேக்ஸ்பியர்