இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98
உலக அறிஞர்களின்
மனமுவந்து புகழாதவர் மட்டமான அறிவுடையவர் ஆவர்.
-வாவனார்கூஸ்
★ ★ ★
36. பழி
'இகழ்தல்' -அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.
-கார்லைல்
நிந்தைமொழிகள் நெருப்புப் பொறிகளை ஒக்கும்; ஊதிவிடாவிட்டால் தாமாக அவிந்து போகும்.
-போயர்ஹீன்
எந்த ஆழ்ந்த புண்ணேனும், வடுவின்றி ஆறியதுண்டோ?
-பைரன்
தற்புகழ்ச்சி முடைநாறும் என்பர்; அப்படியானால் அவர்க்கு அனியாயமாய்க் கூறும் அவதூற்றின் நாற்றம் தெரியாது போலும்!
-கதே
'அவதூறு' சொல்லும் வண்டிக்கு மைபோட ஆள்பஞ்சம் உண்டாவதில்லை.
-ஊய்டா
உலகத்தில் ஒருபாதிக்கு அவதூறு சொல்லுவதில் ஆனந்தம் மற்றப் பாதிக்கு அதை நம்புவதில் ஆனந்தம்.
-பழமொழி
தன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது.
- பாஸ்கல்