இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148 to: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
- நல்ல காதற்கடிதம் எழுதுவதற்கு, நீ என்ன எழுத வேண்டும் என்பதை அறியாமலே எழுதத் தொடங்க வேண்டும், நீ என்ன எழுதியிருக்கிறாய் என்பதை அறியாமலே முடிக்கவேண்டும். அ ரூஸோ
- மனம் மிகவும் தளர்ந்துள்ள சமயத்தில் ஒருவன் தன் நண்பர்கள் எழுதிய கடிதங்களையெல்லம் படித்துப் பார்த்தல் தலைசிறந்த மருந்தாகும். அ ஷென்ஸ்டள்
கடினம்
- உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டங்கள் மனத்தை
வலிமையாக்கும். . லெனிகள்
- நம்முடைய ஆற்றல் அதற்கு எதிராகத் தோன்றும் தடைகளின் அளவைப் பொறுத்தது. அ ஹாஸ்லிம்
- நாம் எதிர்பாராத இடங்களில் தோன்றும் கஷ்டங்களே மிகப்
பெரியவை. அ கதே.
- கடினம், கஷ்டம் என்பது என்ன? குறித்த காரியங்களை முடிக்க எவ்வளவு வலிமை வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லே அது. அதைக் கண்டு குழந்தைகளும் மூடர்களுமே அஞ்சுவர் மனிதர்களுக்கு அது ஊக்கமே அளிக்கும்.
. ஸாமுவேல் வரேன் கட்சிகள்
- கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும். ച്ചേml
- கட்சிக் கொடிகளின் நிழலில்தான் தேசபக்தி புதைக்கப்
படுகின்றது. . அ ைெபயிண்ட் பியெர்