பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனச்சாட்சி ஆன்மாவின் குரல், உணிசிகள் உடலின் குரல்கள் இவைகளுக்குள் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதில் வியட் பில்லை. تی & Co. மனச்சாட்சி ஒரு பெரிய பேரேடு அதில் நமது குற்றங்களெல்லாம் பதியப்பெறுகின்றன. உரிய காலத்தில் நாம் அவைகளை உணர்ந்துகொள்கிறோம். அ பர்ட்டன் நம்முள்ளே தங்கியிருக்கும் மனச்சான்றைப் போல் பயங்கரமாகச் சாட்சி சொல்வோனுமில்லை. அவ்வளவு ஆற்றலுடன் குற்றம் சாட்டுபவனும் இல்லை. அ லாபோகிளில் மனச்சான்று நீதிபதியைப் போல் நம்மைத் தண்டிப்பதற்கு முன்னால், நமக்கு நண்பனைப் போல் எச்சரிக்கை செய்கின்றது - ஸ்டானிஸ்வாஸ் உன் இதயத்திலுள்ள தெய்விகச் சுடரான மனச்சான்றினை அனைந்துவிடாமல் காத்துக்கொள். அ வாஷிங்டன் கோழைத்தனம், அது ஆபத்தில்லையா? என்று கேட்கும்; சமயோசிதம். அதில் பயனுண்டா? என்று கேட்கும். செருக்கு 'அதில் புகழுண்டா? என்று கேட்கும். ஆனால், மனச்சாட்சி, "அது நியாயமா?’ என்று கேட்கும். ைபுன்ஷான் மனச்சான்று ஆட்சி செய்யத் தொடங்கும் பொழுது என் ஆட்சி முடிகின்றது. அ நெப்போலியன் மனச்சான்று நம் அனைவரையும் கோழைகளாக்கிவிடுகின்றது. அ ஷேக்ஸ்பியர் உண்மையான கிைழ்ச்சியின் அடிப்படை மனச்சான்றில் உள்ளது அ வெளிகா நான் போப்பாண்டவருக்கும். அவருடைய திருத் துணைவர்களுக்கும் அஞ்சுவதைவிட என் நெஞ்சுக்கு அதிகம் அஞ்சுகிறேன். என்னுள்ளே ஒரு பெரிய போப்பாண்டவர் இருக்கின்றார். அவரே மனச்சான்று. அ லூதர்