பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

உள்ளம் குளிர்ந்தது

சொன்னார்; "இங்கே தங்கி உணவு கொண்டு இரவு இங்கேயே உறங்கிவிடலாம். மிக விடியற்காலையில் எழுந்திருந்து இங்கேயிருந்து புறப்பட்டுப் போகலாம். இன்னும் நூறு மைல்களாவது. போகவேண்டியிருக்கும் என்று சொன்னார். என்னுடன் வந்தவர்கள் அதற்கு இசையவில்லை. "மட்டக் களப்பில் உள்ள நண்பர்கள். இவர்கள் வருவார்களோ, வரமாட்டார்களோ என்ற ஐயப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களது ஆவல் கட்டுக்கடங்காமல் இருக்கும். இங்கே தங்காமல் எப்படி யாவது அங்கே போய் விட்டால் ஒரேயடியாக இளைப்பாறிக் கொள்ளலாம்" என்று வற்புறுத்தினார்கள். அதுவும் சரி என்று நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.

நாங்கள் உரையாடிக்கொண்டே போனோம்.எங்களுடன் வந்த பண்டித கிருஷ்ணபிள்ளை நன்றாகப் படித்தவர், சிறந்த ரசிகர். அவர் பலவற்றைச் சொல்ல, நானும் தமிழ் சம்பந்தமான பல கருத்துக்களை சொல்லிக் கொண்டு வந்தேன். பின்பு திருப்புகழ் சில பாடினேன். கந்தர் அலங்கார நுட்பங்களைச் சொல்லத் தொடங்கினேன். சில பாடல்களில் உள்ள நயங்களைச் சொன்னவன், பேச்சில் பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டுக் கந்தர் அலங்காரப் பாடல்களையே சொல்லலானேன். அந்தப் பாடல்களை வாய் விட்டுப் பாடத் தொடங்கியவுடனே எனக்கு உணர்ச்சி விஞ்சியது. மற்றவர்கள் கேட்கிறார்களோ. இல்லையோ என்பதைக் கவனியாமல் நான் உணர்ச்சி வசப்பட்டுப் பாடிக்கொண்டே இருந்தேன். நல்ல வேளை! மற்றவர்கள் அமைதியாகக் கேட்டு வந்தார்கள்.


நாங்கள் பெரிய காட்டுக்கு நடுவில் போய்க் கொண்டிருந்தோம். இலங்கையில் உள்ள காடுகள் மைல் கணக்கில் கீண்டு இருக்கும். இரண்டு பக்கமும் மரங்கள் ஓங்கி உயர்ந்து சுவர் எடுத்தது போல வளர்ந்திருக்கும். அவற்றிற்