பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

125

கிடையில் சாலை செல்லும். வளைவே இல்லாமல் ஒரே நேர் கோட்டைப் போல அந்தச் சாலை இருக்கும். காடுகளில் யானைகள் சஞ்சாரம் செய்வது உண்டு. அமாவாசை இருளில் அத்தகைய சாலை வழியே நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.

கார் போய்க்கொண்டிருந்தது. வரவர அதன் வேகம் மிகுதியாயிற்று. கார் ஓட்டி ஏதோ முணுமுணுத்துப் பேசினார். நான் அதைக் கவனிக்கவில்லை, நான் அலங்காரப் பாட்டில் கருத்தாக இருந்தேன். அருணகிரிநாத சுவாமிகளுடைய திருவடியில் நின்று கந்தர் அலங்காரத்திலே உள்ளத்தைப் பறிகொடுத்துப் பாடிக் கொண்டிருந்தேன். கார் தலை தெறிக்கும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. என்னுடைய நண்பர்கள் ஏதோ பேசிக்கொண்டதாக ரினைப்பு இருக்கிறது. ஆனால் இன்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. நான் பாடப் பாட அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நெடுந்தூரம் போன பிறகு ஓர் ஊர் வந்தது. எதிரே வேறு ஒருவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடத்தில் எங்களுடைய கார் ஓட்டி ஏதோ சொன்னார். வந்தவர் காரை மேலே ஓட்டாமல் நிறுத்திவிட்டார்.


கடைசியில் கார் மட்டக்களப்பை அடைந்தது. அங்கே உள்ள நண்பர்கள் தங்குவதற்கு ஓர் அழகான இடத்தை ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். அங்கே சென்று கை காலைச் சுத்தி செய்துகொண்டு திருநீற்றை எடுத்து இட்டுக்கொண்டேன். கந்தர் அலங்காரம் சொல்லிவந்தமையினால் எனக்கு ஒருவகையான கிளர்ச்சி உண்டாகி இருந்தது. முருகா என்று சொல்லி நெற்றி நிறைய நீற்றை இட்டுக்கொண்டேன். அப்போது கார் ஓட்டி பணிவுடன் வந்து என் காலில் நெடுஞ்சாண்