பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

உள்ளம் குளிர்ந்தது

உள்ளத்தே நிலை கொள்ளத் தொடங்கும். இந்த அநுபவத்தில் வல்லவராகிய அருணகிரியார் தம்முடைய அநுபவம் நமக்கும் வாவேண்டுமென்ற கருணையினால் நமக்கு வழி காட்டத் தொடங்குகிறார்.

அருணகிரிநாதர் முருகனைக் குருவாகக் கொண்டவர். முருகன் குருவாய் எழுந்தருளி அவ்வப்போது அவருடைய பக்குவத்திற்கு ஏற்றபடி பல்வேறு உபதேசங்கள் செய்தான் என்பதை அவருடைய பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.

குருவின் பெருமை

ந்தக் காரியமானாலும் குரு இல்லாமல் கைகூடாது. வித்தியாகுரு, ஞானகுரு என்று குருநாதர்களை இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியரை வித்தியா குரு என்றும், ஞான உபதேசம் செய்கின்றவரை ஞானகுரு என்றும் சொல்வது வழக்கம். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எப்படி வெவ்வேறாக இருக்கிறார்களோ, அதுமாதிரியே ஞானஉபதேசம் செய்யும் குருமார்களும் படிப்படியாகப் பலர் இருப்பது உண்டு. பழைய காலத்தில் ஒரே ஆசிரியரிடம் எல்லா நூல்களையும் கற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அதேபோல் ஒரு ஞான குருவை அண்டி நல்லுபதேசம் பெற்றுச் சாதனம் செய்து அதனால் அனுபவம் பெற்றவர்கள் பலர்.

இறைவனுடைய திருவருளைப் பெற விரும்புகிறவர்கள் அதற்கு முன்பு குருநாதனுடைய திருவருளைப் பெற வேண்டும். குருநாதன் அருள் இல்லாமல் இறைவன் அருள் கிட்டாது. சூரிய காந்தமும், சூரியன் ஒளியும், பஞ்சும் சேரும்போது சூரிய காந்தம் பஞ்சைச் சுட்டுவிடுகிறது. சூரிய காந்தத்திற்குப் பஞ்சைச் சுடும் ஆற்றல் இருந்தாலும் சூரியனுடைய சந்நிதியில்தான் அது சுடும். வீட்டுக்குள்ளே பஞ்சை வைத்துக் கொண்டு அதற்கு அருகில் மணிக்கணக்காகப் பூதக்