பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

41

காதிலும் கேட்டிருக்கும். ஆனாலும் அப்போது வந்து காப்பாற்றினவர் திருமாலே. இந்தக் கதையை மனத்தில் கொண்டு,

கரி கூப்பிட்ட நாள்

கராப்படக் கொன்று

என்று அருணகிரியார் சொல்கிறார். அதனைக் காப்பாற்றிய திருமாலை நன்றி உணர்வு பொங்க அந்த யானை போற்றி நின்றதாம். அது போற்றும்படி செய்து உலகத்திற்குக் கருணை புரிந்து நிலை நிற்கிற கடவுள் திருமால்.

அக் கரி போற்ற நின்ற கடவுள்.

கசேந்திரன் வரலாறு


ந்த யானை எது தெரியுமா? பாண்டி நாட்டில் திருமாலிடத்தில் பக்தி உடையவனாக இந்திரத்யும்நன் என்ற அரசன் இருந்தான்.அவன் அகத்தியர் சாபத்தால் யானையானான். ஒவ்வொரு நாளும் ஆயிரம் தாமரையைப் பறித்து வந்து திருமாலை வழிபடும் வழக்கம் உடையது அந்த யானை. அதற்குத் திருமாலை வழிபடவேண்டு மென்ற அறிவு இருந்தது. அதனை முதலை பற்றிக்கொண்டவுடன் திருமாலை எண்ணி ஆதி மூலமே என்று கூப்பிட்டது. அப்போது திருமால் ஓடி வந்தார். முதலையைச் சங்கரித்து யானையை மீட்டார். முதலையின் வாயிலிருந்து விடுதலை பெற்ற யானை திருமாலைத் தோத்திரம் செய்தது.இப்படி ஆபத்தில் இருந்த யானையைக் காத்து அதுசெய்த துதிகளைக் கேட்டுப் பெருமையோடு நிற்கிறவர் திருமால். "அவ்வளவு பெருமையுடைய திருமாலே மெச்சும்படியாக விளங்குகிறவன் எங்களுடைய வேலாயுதக் கடவுள்" என்று சொல்கிறார் அருணகிரியார்.

கரி கூப்பிட்ட நாள்

கராப்படக் கொன்று அக் கரிபோற்ற நின்ற