பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும்—கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈரா
றருள்விழியும் மாமுகங்கள் ஆறும்—வீசிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர் தோன்ற

என்று சுந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் விண்ணப்பித்துக் கொள்கிறார். அருணகிரி நாதரோ, "எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே" என்று அந்த அனுபவம் தமக்குக் கைவந்ததென்று சொல்கிறார். யமன் வந்தாலும் அஞ்சாமல் வீற்கும் உறுதிப்பாடு தமக்கு இருப்பதை ஒரு பாட்டில் சொல்கிறார்(6). அந்தப் பாடல் இறுதிப்பாடலாக அமைந்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. இப்படி மூன்று பாடல்கள் அருணகிரிநாதர் பெற்ற உயர்ந்த அநுபவத்தைப் பேசுகின்றன (1,3,6.) மற்ற மூன்று பாடல்கள் நமக்காகப் பாடியவை; நாம் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டியவை. 'இராப்பகல் அற்ற இடம் காட்டி அருள வேண்டும்', ஆவிக்கு மோசம் வரும் என்பதை உணர்ந்து நின் திருவடியைச் சேவிக்க வேண்டும்', 'உள்ளத்துயரை ஒழித்தருள வேண்டும்' என்று அந்த மூன்று பாடல்களிலும் மூன்று வகை வேண்டுகோள்கள் இருக்கின்றன (2, 4, 5.)

முருகன் திருவடியில் தண்டையும் சிலம்பும் ஒளிர்கின்றன. குராமலரையும் அத் திருவடிகள் புனைந்திருக்கின்றன. அவை அருள் மயமாக உள்ளன. அவனுடைய தடம்புயங்கள். ஆறிரண்டிலும் கடம்பமாலை புரள்கின்றது. அந்தப் பன்னிரு தோள்களும் வரிசையாக இருபக்கங்களிலும் இருக்கின்றன. அவனுடைய திருக்கை ஒன்று அபயத்தைக் காட்டுகிறது. ஒருகை வேலைப் பற்றி யிருக்கிறது. அந்த வேல் மலையை ஊடுருவப் பொருத வடிவேல்; பராக்ரமவேல் சிவந்த பிறம் வாய்ந்த சினவடிவேல். அவனுடைய திருமுகங்கள் ஆறும் மணம் வீசுகின்றன. கண்கள் தாமரை மலரைப் போல விளங்குகின்றன.

முருகன் குருவடிவாய் வருகிறவன்; திருமால் மெச்சும் வீரம் உடையவன்; கிருதசங்கார பயங்கரன்; சேவல் கொடி உடையவன்;