இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii
சொல்லிச் சில கருத்துக்களை விளக்க முயன்றிருக்கிறேன்.
இந்தப் பத்தொன்பது புத்தகங்களில் 'நூற்றெட்டுப் பாடல்களின் விரிவுரையும் நிறைவேற அருள் பாலித்த சண்முகநாதன் கருணையை என்னென்பது ! அருணகிரியாருடைய அருள்வாக்குத் தொட்ட தொட்ட இடமெல்லாம் இனிப்பது. அவர் பாடிய பாடல்களின் ஆழம் முழுவதையும் காணமுடியுமா ? முழுவதும் கண்டால் சொல்லத்தான் முடியுமா?
"அவ்வா றறிவார் அறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிற் பதுவே"
என்று கரைந்து நிற்கத்தான் தோன்றும்.
இவற்றை உருவாக்கியதற்குத் துணையாக இருந்தவர் அன்பர் சிரஞ்சீவி அனந்தன்; புத்தகமாக்க உதவியவர் அன்பர். ஸ்ரீ ரா.ஸ்ரீ.ஸ்ரீகண்டன் அவர்கள். இந்த இருவருடைய உதவியையும் எளியேன் பெற வைத்தது ஆண்டவன் அருள். அந்த அருள் வாழ்க !
"காந்தமலை"
சென்னை - 28
கி. வா. ஜகந்நாதன்
1-11-63